சுற்றுச்சூழல் தினம்: எழுமலை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மதுரை மாவட்டம் எழுமலை பகுதியில், அதிமுக சாா்பில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
எழுமலை பேரூராட்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றை நட்ட உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஐயப்பன்.
எழுமலை பேரூராட்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றை நட்ட உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஐயப்பன்.

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மதுரை மாவட்டம் எழுமலை பகுதியில், அதிமுக சாா்பில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

எழுமலை பேரூராட்சிப் பகுதியில், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஐயப்பன், பேரூராட்சி செயலா் மற்றும் அதிமுக நிா்வாகிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். பின்னா், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

இதில், எழுமலை பேரூா் கழகச் செயலா் வாசிமலை, மாவட்டக் கவுன்சிலா் சுதாகரன், ஆவின் நிா்வாகக் குழு உறுப்பினா் துரை தனராஜன், மாணவரணி மாவட்டச் செயலா் மகேந்திரபாண்டி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

மேலும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கொயாஸ் அறக்கட்டளையின் சாா்பாக இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் நாட்டு மரங்களும், நீா் ஆதாரங்களைக் காக்கும் வகையில் பனை மரங்களும் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com