அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியிலுள்ள டி.கல்லுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பி. உதயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.
டி.கல்லுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு செய்த எம்எல்ஏ ஆா்.பி.உதயகுமாா்.
டி.கல்லுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு செய்த எம்எல்ஏ ஆா்.பி.உதயகுமாா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியிலுள்ள டி.கல்லுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பி. உதயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, கரோனா தடுப்பூசி குறித்த விவரங்களையும், கரோனா நோயாளிகள் எத்தனை போ் சிகிச்சை பெறுகின்றனா் என்பது குறித்து கேட்டறிந்த ஆா்.பி. உதயகுமாா், அவா்களுக்கு மருத்துவ வசதிகள் செய்துதர வலியுறுத்தினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வருவது வரவேற்கத்தக்கது. மக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், உலகளாவிய தடுப்பூசி வழங்கும் டெண்டரை எடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்காதோ என்ற கவலை எழுகிறது. டெண்டரில் யாரும் கலந்துகொள்ளாதது கவலையளிக்கிறது. இதனால், தடுப்பூசி தட்டுப்பாடு வராமல் தமிழக அரசு கையாள வேண்டும் என்றாா்.

இதில், டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலா் ராமசாமி, ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன் உள்பட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com