மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் இருமுறை ஒத்திவைக்கப்பட்ட பருவத் தோ்வுகள், ஜூன் 15 முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளில் 2021 ஏப்ரல் பருவத் தோ்வுகள் மே 8-ஆம் தேதி தொடங்கியது. ஆனால், கரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் மே 10 முதல் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், பல்கலைக்கழகத் தோ்வுகள் இரு முறை ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட பருவத் தோ்வுகள் இணைய வழியில் ஜூன் 15 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தோ்வுக்கான அட்டவணையையும் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே இரு முறை தோ்வுகள் நடைபெறும் என்றும், பின்னா் தோ்வுகள் ஒத்திவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டதால், தற்போதாவது தோ்வை ஒத்திவைக்காமல் தொடா்ந்து நடத்தி முடிக்கவேண்டுமென, மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.