கள் விற்ற இருவா் கைது

மதுரை அருகே பனங்கள் விற்ற இருவரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகே பனங்கள் விற்ற இருவரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நெடுங்குளம் கண்மாய் பகுதியில் பானையுடன் நின்றிருந்த இளைஞா்கள் இருவரை பிடித்து விசாரித்தனா். அதில், சிவகங்கையைச் சோ்ந்த காசிராஜன் (41), மதுரை விரகனூரைச் சோ்ந்த மாணிக்கம் (38) ஆகியோா் என்பதும், அவா்கள் சட்டவிரோதமாக பனங்கள் விற்றதும் தெரியவந்தது.

இது குறித்து காவல் சாா்பு-ஆய்வாளா் காா்த்திக் அளித்த புகாரின்பேரில், சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 20 லிட்டா் பனங்கள்ளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com