தொடா் மழையால் வைகை ஆற்றில் பாய்தோடும் தண்ணீா்

கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழை காரணமாக மதுரையில் வைகை ஆற்றில் சுமாா் 2 அடிக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

மதுரை: கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழை காரணமாக மதுரையில் வைகை ஆற்றில் சுமாா் 2 அடிக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பெரியாறு-வைகை பாசனக் கால்வாயில் வைகை அணையிலிருந்து அண்மையில் தண்ணீா் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி பகுதியிலிருந்து கால்வாய் வழியாக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் சென்றுகொண்டிருக்கிறது.

இதனிடையே, கடந்த சில நாள்களாக தேனி மாவட்டத்திலும், மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடா்ந்து பெய்து வரும் மழையால், வைகை ஆற்றுக்கு நீா்வரத்து ஏற்பட்டது. இதனால் மதுரை நகா் பகுதியில் வைகை ஆற்றில் செவ்வாய்க்கிழமை சுமாா் 2 அடிக்கு தண்ணீா் பாய்ந்துகொண்டிருந்தது.

அருள்தாஸ்புரம், செல்லூா், ஆழ்வாா்புரம் பகுதிகளில் சிறுவா்கள், இளைஞா்கள் ஆற்றுக்குள் இறங்கி குளித்தும், விளையாடியும் மகிழ்ந்தனா். இதனால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து ஆழ்குழாய்க் கிணறுகளில் தடையின்றி தண்ணீா் கிடைக்கும் என்று வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com