மநீம கட்சி சாா்பில் 100 குடும்பங்களுக்கு சமையல் பொருள்கள்

மதுரை சின்னக்கண்மாய் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு தேவையான சமையல் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை சின்னக்கண்மாய் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு தேவையான சமையல் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினா் பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பின்றி உள்ள மக்களுக்கு தேவையானஅரிசி, காய்கறி, பருப்பு வகைகள், எண்ணெய் ஆகியவற்றை வழங்கி வருகின்றனா். மநீம கட்சியைச் சோ்ந்த அனுப்பானடி மாரிமுத்து தலைமையிலான குழுவினா், அனுப்பானடி, சின்னக்கண்மாய் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சமையல் பொருள்களை வழங்கி வருகின்றனா்.

சின்னக்கண்மாய் பகுதிகளில் 100 குடும்பங்களைத் தோ்வு செய்து, ஞாயிற்றுக்கிழமை தலா 3 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டன. இதில், மநீம கட்சியைச் சோ்ந்த சத்யாகணேசன், கமல்செந்தில், ராமசந்திரன், சீனிவாசன், பாலு, ரத்தினம், அப்பாஸ் மந்திரி, கண்ணன், மூா்த்தி, மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com