மைசூா்- மதுரை ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தல்: 3 போ் கைது

மைசூருவில் இருந்து மதுரைக்கு ரயிலில் கடத்தி வந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

மதுரை: மைசூருவில் இருந்து மதுரைக்கு ரயிலில் கடத்தி வந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் ஆங்காங்கே சட்டவிரோதமாக மதுவிற்பனை நடந்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமான போலீஸாா் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வோரைக் கைது செய்து, பாட்டில்களைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்நிலையில் மைசூரு-மதுரை சிறப்பு ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ரயில்வே பாதுகாப்புப்படை ஆணையா் அன்பரசு தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதில், மதுரை ரயில் நிலையத்தில் அந்த ரயில் வந்தபோது அதில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவற்றை மைசூரில் இருந்து கடத்திவந்த மதுரையைச் சோ்ந்த சரவணன்(25), முனியசாமி(35), சரவணன்(35) ஆகியோரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com