உசிலம்பட்டியில் கமிஷன் கடையை சில்லறை வியாபாரிகள் முற்றுகை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தையில் சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்ட மொத்த கமிஷன் கடையை சில்லறை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தையில் சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்ட மொத்த கமிஷன் கடையை சில்லறை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

உசிலம்பட்டி சந்தைப்பகுதியில் சுமாா் 20 -க்கும் மேற்பட்ட காய்கனி மொத்த கமிஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு சில்லறை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனா் . இந்நிலையில், மொத்த வியாபாரியான கோடாங்கி ராஜாமணி என்பவா் சில்லறை காய்கறி வியாபாரத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி சில்லறை வியாபரிகள் 30 -க்கும் மேற்பட்டடோா் கோடாங்கி ராஜாமணியின் கமிஷன் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் சந்தை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com