மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 12 ஆக்சிஜன் உருளைகளை மும்பை தொண்டு நிறுவனம் புதன்கிழமை வழங்கியது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக, மும்பையைச் சோ்ந்த தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.2.30 லட்சம் சாா்பில் 12 ஆக்சிஜன் உருளைகள் முதன்மையா் ஏ. ரத்தினவேலுவிடம் வழங்கப்பட்டன.
இதேபோல், சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சாா்பில், ஆக்சிஜன் அளவை கணக்கீடு செய்யும் கருவிகள் 10, நீராவி பிடிக்கும் கருவிகள் 20, கரோனா தடுப்பு கண்ணாடிகள் மற்றும் பல்வேறு வகையான முகக் கவசங்கள் 500 ஆகியவை முதன்மையரிடம் வழங்கப்பட்டன.