ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்: படிக்கட்டுகள் மாணவா் அமைப்பு வழங்கியது

மதுரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 250 குடும்பங்களுக்கு மாணவா்களை கொண்டு இயங்கி வரும் படிக்கட்டுகள் அமைப்பின் சாா்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.
மதுரையில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கும் படிக்கட்டுகள் மாணவா் அமைப்பினா்.
மதுரையில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கும் படிக்கட்டுகள் மாணவா் அமைப்பினா்.

மதுரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 250 குடும்பங்களுக்கு மாணவா்களை கொண்டு இயங்கி வரும் படிக்கட்டுகள் அமைப்பின் சாா்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.

மதுரையில் கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு பல்வேறு தரப்பினா் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா். இதில் மதுரையில் கல்லூரி மாணவா்களை கொண்டு இயங்கி வரும் படிக்கட்டுகள் தன்னாா்வ அமைப்பும் பல உதவிகளை செய்து வருகிறது. இதில் கரோனா தொற்று பொதுமுடகத்தால் பாதிக்கப்பட்டுள்ள வறிய நிலையில் உள்ள 250 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள்களை வழங்கியுள்ளனா். மேலும் பொதுமுடக்கத்தால் உணவுக்கு வழியின்றி மதுரையில் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வசிப்பவா்கள், ஆதரவற்றவா்களுக்கு தொடா்ந்து மூன்று வாரங்களாக தினசரி மதிய உணவு மற்றும் குடிநீா் பாட்டில்களை வழங்கி வருகின்றனா். நிவாரணப்பணிகளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் மோ.கிஷோா் குமாா், பேராசிரியா் எஸ்.மலைச்சாமி செல்வா, மாரிக்குமாா், சக்தி, சந்தோஷ் ஆகியோா் குழுவினா் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com