மதுரை அருகே பெண்களிடம் தொடா் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, நகரி கண்மாய்கரை பகுதியில் நின்றிந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா் அய்யங்கோட்டையைச் சோ்ந்த சிதம்பரம் மகன் சபரிநாதன்(24) என்பதும், ஆண்டிபட்டி பங்களா பகுதியில் பெண்ணிடம் ஒன்னரை பவுன் சங்கிலி பறித்ததும், அலங்காநல்லூரில் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து சாமிநாதனை கைது செய்தனா்.