மூதாட்டியை கட்டிப்போட்டு 11 நகைகள் கொள்ளை

உசிலம்பட்டி அருகே புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 11 பவுன் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா் .

உசிலம்பட்டி அருகே புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 11 பவுன் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா் .

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகா் மனைவி முனியம்மாள்(70). கணவா் இறந்துவிட்ட நிலையில், முனியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்தநிலையில் முனியம்மாள் வழக்கம்போல் வீட்டு வாசல் முன்பு தனியாக இருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவா் வங்கியில் இருந்து வருவதாகவும் , உங்களுக்கு கடிதம் வந்துள்ளதாகவும் கூறி கடிதத்தில் கையொழுத்திடுமாறும் தெரிவித்தாா். இதனால் மூதாட்டி வீட்டிற்குள் கையெழுத்துப்போட பேனாவை எடுக்க சென்றாா். இந்த சமயத்தை பயன்படுத்தி அந்த பெண் மூதாட்டியை வீட்டிற்குள் கட்டிப்போட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா், அவரை மீட்டனா். இதுதொடா்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த உசிலம்பட்டி போலீஸாா், தப்பியோடிய பெண்ணைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com