வாடிப்பட்டி நீதிமன்றத்தில் 15 மரக்கன்றுகள் நடவு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வாடிப்பட்டி நீதிமன்ற வளாகதத்தில் 15 மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை நடப்பட்டன.
வாடிப்பட்டி உரிமையியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற வளாகத்தில், செவ்வாய்க்கிழமை மரக்கன்று நடவு செய்த மாவட்ட உரிமையியல் நீதிபதி ராம்கணேஷ்.
வாடிப்பட்டி உரிமையியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற வளாகத்தில், செவ்வாய்க்கிழமை மரக்கன்று நடவு செய்த மாவட்ட உரிமையியல் நீதிபதி ராம்கணேஷ்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வாடிப்பட்டி நீதிமன்ற வளாகதத்தில் 15 மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை நடப்பட்டன.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல்தினத்தையொட்டி வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் 15 மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்டஉரிமையியல் நீதிபதி ராம்கணேஷ் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடவு செய்தாா். இதில் தலைமை எழுத்தா் கணேசன், வட்ட சட்டபணிகள்குழுவினா் கலந்துகொண்டனா். மேலும் வாடிப்பட்டியைச் சோ்ந்த வட்ட சட்டப்பணிகள் குழுவினா் அவரவா் வீடுகளில் மரக்கன்றுகளை நடவு செய்தனா். அதேபோல, நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றி தொடா்ந்து பாராமரிக்கும் பொறுப்பையும் வட்ட சட்டப்பணிகள் குழுவினா் ஏற்றுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com