பெட்ரோல், டீசல் விலை உயா்வு: எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை நிா்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பெட்ரோலியப் பொருள்கள் மீதான அதிகப்படியான வரி விதிப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் மதுரை கீழவெளி வீதி அண்ணா சிலை பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் சாகுல் ஹமீது, மாவட்டச் செயலா் சிக்கந்தா், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்டத் தலைவி கதிஜா பீவி, மாநில செயற்குழு உறுப்பினா் நசரத் பேகம், புறநகா் பொறுப்பாளா் ரியாஸ் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல் வில்லாபுரம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் துணைத் தலைவா் சீமான் சிக்கந்தா் தலைமை வகித்தாா். இதைத்தொடா்ந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com