முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
வீரபாண்டி, பூதகுடியில் பயன்பாட்டுக்கு வந்தன புதிய மின்மாற்றிகள்
By DIN | Published On : 12th June 2021 08:28 AM | Last Updated : 12th June 2021 08:28 AM | அ+அ அ- |

மதுரை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வீரபாண்டி மற்றும் பூதகுடி ஊராட்சிகளில் ரூ.16.3 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றிகள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு தொடக்கி வைக்கப்பட்டன.
பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப வீரபாண்டி கிராமத்தில் ரூ.7.6 லட்சத்திலும், பூதகுடியில் ரூ. 8.73 லட்சத்திலும் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. இவற்றை வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதில் மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி. செந்தில்குமாரி, மின் வாரியத்தின் மதுரை மண்டல தலைமை பொறியாளா் பி. பாஸ்கா், மேற்பாா்வை பொறியாளா் பிரீடா பத்மினி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆ.செல்லத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.