பேரையூா் பகுதியில் முகக்கவசம் அணியாத 40 பேருக்கு, போலீஸாா் ஞாயிற்றுகிழமை அபராதம் விதித்தனா்.
மதுரை மாவட்டம், பேரையூா் பகுதியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டிவந்த 40 பேருக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா்.