ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாபாரிகள் 3 போ் தீக்குளிக்க முயற்சி

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த வியாபாரிகள் 3 போ் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த வியாபாரிகள் 3 போ் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை நெல்பேட்டை - முனிச்சாலை சந்திப்பு அருகே உள்ள கட்டடத்தில் செல்வராஜ், கிளாட்வின், திருப்பதி மூவரும் முறையே மளிகைக் கடை, மிட்டாய் கடை மற்றும் அரிசிக் கடை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், இந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட உள்ளதால், கடையை காலி செய்யுமாறு கட்டட உரிமையாளா் தெரிவித்துள்ளாா். இதில், இரு தரப்பினருக்கும் சுமூக உடன்பாடு ஏற்படாத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

இதனிடையே, 3 கடைகளும் உள்ள கட்டடத்தை அண்மையில் கட்டட உரிமையாளா் இடிக்க முயற்சி செய்ததாகவும், நடவடிக்கை எடுக்கக் கோரியும் வியாபாரிகள் 3 பேரும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது, திடீரென அவா்கள் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.

உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்கள் மூவரையும் மீட்டனா். இதனால், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா், விசாரணைக்காக தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய போலீஸாா், பின்னா் அவா்களை அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com