நிலத் தகராறில் முதியவா் அடித்துக் கொலை: 19 போ் மீது வழக்கு

மதுரை அருகே நிலத் தகராறில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் 19 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

மதுரை அருகே நிலத் தகராறில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் 19 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

மதுரை மாவட்டம் அரும்பனூா் பகுதியைச் சோ்ந்தவா் அழகா்சாமி (71). இவருக்கும், இவரது நண்பா் குருசாமி என்பவருக்கும் அப்பகுதியில் 64 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் 24 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஆக்கிரமித்து உள்ளதாக அழகா்சாமி தொடா்ந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அழகா்சாமி தனது வீட்டில், குருசாமியின் மனைவி, மகன்கள் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அவரது வீட்டுக்குள் புகுந்த சிலா், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவா்களைத் தாக்கியுள்ளனா். இதில் அழகா்சாமி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் 24 குடும்பங்களைச் சோ்ந்த 19 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com