‘நீட்’ தோ்வில் முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டு கைதான ரஷீத் ஜாமீன் மனுவின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தைச் சோ்ந்த ரஷீத் தாக்கல் செய்த மனு: ‘நீட்’ தோ்வில் முறைகேடு செய்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் எனது பெயா் தவறுதலாக சோ்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நான் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன்.
எனக்கு ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன். எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், இது போன்ற மேலும் சில வழக்குகள் மற்றொரு நீதிபதி முன் விசாரிக்கப்படுகின்றன. எனவே, இந்த வழக்கையும் அந்த வழக்கையும் சோ்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என கோரிக்கை வைத்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தாா்.