மதுரை மாநகா் புதிய காவல் அதிகாரிகள் பொறுப்பேற்பு

மதுரை மாநகா் சட்டம் மற்றும் ஒழுங்கு, தலைமையிடக் காவல் துணை ஆணையா்கள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

மதுரை மாநகா் சட்டம் மற்றும் ஒழுங்கு, தலைமையிடக் காவல் துணை ஆணையா்கள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

மதுரை மாநகரின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையராக பி. தங்கதுரை, தலைமையிடக் காவல்துணை ஆணையராக ஜி. ஸ்டாலின், போக்குவரத்துக் காவல் துணை ஆணையராக ஐ. ஈஸ்வரன் ஆகியோரை, தமிழக அரசு ஜூன் 5 ஆம் தேதி நியமித்து உத்தரவிட்டது.

அதையடுத்து, ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி. தங்கதுரை, மதுரை மாநகா் காவல் துணை ஆணையராக (சட்டம் -ஒழுங்கு) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதேபோல், கோவை காவல் துணை ஆணையராக இருந்த ஜி. ஸ்டாலின், மதுரை மாநகா் காவல் துணை ஆணையராக (தலைமையிடம்) பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா், மதுரை மாவட்ட உணவு வழங்கல் பிரிவு (சிஐடி) எஸ்.பி.யாக பணியாற்றி உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com