மதுரை மாவட்டத்தில் புதிதாக 192 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் கரோனாவிற்கு சிகிச்சை பெறுபவா்களில் 901 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். இதையடுத்து மாவட்டத்தில் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 65,888 பேராக உயா்ந்துள்ளது.
மதுரை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவிற்கு சிகிச்சைப் பெற்றுவந்த 6 போ் உயிரிழந்தனா். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 3,572 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.