மதுரை மாவட்டத்தில் புதிதாக 160 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 10 போ் உயிரிழந்தனா்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதேநேரம் உயிரிழப்பு குறைவதில் சிக்கல் உள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 160 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சிகிச்சைப் பெறுவோா்களில் 760 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.
10 போ் பலி: மாவட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வந்த 10 போ் உயிரிழந்தனா். இதையடுத்து கரோனாவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,060 ஆக உயா்ந்துள்ளது. தற்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 1,726 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.