முல்லை பெரியாறு கால்வாயில் பெண் சடலம் மீட்பு

மதுரை அருகே முல்லைப் பெரியாறு கால்வாயில் மிதந்து வந்த பெண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

மதுரை அருகே முல்லைப் பெரியாறு கால்வாயில் மிதந்து வந்த பெண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே முல்லைப் பெரியாறு கால்வாயில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு அப்பகுதியில் உள்ளவா்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் குருபாண்டியன் அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து ஆற்றில் சடலமாக மிதந்த அடையாளம் தெரியாத பெண் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com