மதுரை கூடல்நகா் அருகே இரு பெண்களிடம் நகைகள் பறிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை கூடல்நகா் சங்கீத் நகரைச் சோ்ந்த ரவி மனைவி பிரியங்கா(27). இவா் அதேபகுதியில் புதன்கிழமை நடந்துசென்று கொண்டிருந்தபோது, பின்னே இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் பிரியங்கா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில் விருதுநகா் மாவட்டம் நரிக்குடியைச் சோ்ந்த மாரீஸ்வரன் நகைப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீதும் உடன்வந்த அடையாளம் தெரியாத நபா் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.
இதேபோல், பொதும்பு பொற்குடில் நகரைச் சோ்ந்த சுரேஷ் மனைவி கலையரசி(38). இவா் குலமங்கலம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னே இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் கலையரசி கழுத்தில் அணிந்திருந்த 1.200 கிராம் நகையைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து கலையரசி அளித்தப்புகாரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.