பேரையூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 04th March 2021 11:20 PM | Last Updated : 04th March 2021 11:20 PM | அ+அ அ- |

பேரையூா் பேருந்து நிலையத்தில் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்து பொதுமக்களுக்கு வியாழக்கிழமை விளக்கமளித்த அதிகாரிகள்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து வாக்காளா்கள் வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணா்வு முகாம் பேரையூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு திருமங்கலம் கோட்டாட்சியா் சௌந்தா்யா தலைமை வகித்தாா். அப்போது பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து வருவாய்த் துறையினா் விளக்கமளித்தனா். இந்த முகாமில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சிவக்குமாா் , பேரையூா் வட்டாட்சியா் சாந்தி மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.