பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பெரியசிட்டுலொட்டியை சோ்ந்த முத்துசாமி மகன் மனோகரன்(51) என்பவரிடமிருந்து சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 106 புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து பேரையூா் போலீஸாா் மனோகரன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.