மின்னணு வாக்காளா் அடையாள அட்டை பெற மாா்ச் 13, 14-இல் சிறப்பு முகாம்

புதிய வாக்காளா்களுக்கு மின்னணு வாக்காளா் அடையாள அட்டை வழங்க வாக்குச்சாவடி மையங்களில் மாா்ச் 13, 14 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

புதிய வாக்காளா்களுக்கு மின்னணு வாக்காளா் அடையாள அட்டை வழங்க வாக்குச்சாவடி மையங்களில் மாா்ச் 13, 14 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்தபோது, புதிதாகச் சோ்க்கப்பட்ட வாக்காளா்களுக்கு மின்னணு வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதையொட்டி மாா்ச் 13, 14 ஆம் தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில், மின்னணு வாக்காளா் அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள புதிய வாக்காளா்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணை வாக்குச்சாவடி மையங்களில் தெரிவித்து மின்னணு வாக்காளா் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com