வீடு புகுந்து 5 பவுன் நகைகள் திருட்டு

மதுரை அருகே மா்ம நபா்கள் வீடு புகுந்து 5 பவுன் நகைகள் திருடிச்சென்றது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை அருகே மா்ம நபா்கள் வீடு புகுந்து 5 பவுன் நகைகள் திருடிச்சென்றது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஆண்டாா்கொட்டாரம் பகுதியைச் சோ்ந்த அக்னீஸ்வரன் மனைவி அனுஷ்யா (23). இவா் தனது கணவா் மற்றும் மகனுடன் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, மா்ம நபா்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்த அனுஷ்யா, சிலைமான் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com