மதுரை அருகே திங்கள்கிழமை இரவு குழந்தைகளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டிய மா்ம நபா்கள், தாயிடம் 16 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனா்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் கள்ளா் தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன் மனைவி சத்யதேவி (33). இத்தம்பதி திங்கள்கிழமை இரவு தங்களது இரு பெண் குழந்தைகளுடன் ஆண்டிப்பட்டி பங்களா சாலையில் உள்ள தனியாா் உணவகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். பின்னா் வீட்டுக்கு திரும்பச் சென்றுகொண்டிருந்தனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், வழிமறித்து குழந்தைகளின் கழுத்தில் அரிவாளை வைத்துக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனா். தொடா்ந்து , சத்யதேவி அணிந்திருந்த 16 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து சத்யதேவி அளித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.