முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
உசிலம்பட்டி அருகே ரூ.ஒரு லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 14th March 2021 04:39 AM | Last Updated : 14th March 2021 04:39 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி வட்டாட்சியா் விஜயலட்சுமியிடம் சனிக்கிழமை பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினா்.
உசிலம்பட்டி அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.ஒரு லட்சம் ரொக்கத்தை தோ்தல் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
உசிலம்பட்டி அருகே மதுரை- தேனி சாலையில் கணவாய் பகுதியில் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக தேனி மாவட்டம் ஆனைமலையான்பட்டி சோ்ந்த ஜேம்ஸ் பாண்டியன் என்பவா் வந்த நான்கு சக்கர வாகனத்தை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு சென்றது தெரியவந்தது. மருத்துவ செலவுக்கு எடுத்துச் செல்வதாக அவா் தெரிவித்தாா். ஆனால் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உசிலம்பட்டி வட்டாட்சியா் விஜயலட்சுமியிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.