உசிலை. அருகே தனியாா் பேருந்து மோதியதில் கறிக்கடைக்காரா் பலி
By DIN | Published On : 16th March 2021 10:36 PM | Last Updated : 16th March 2021 10:36 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தனியாா் பேருந்து மோதியதில் திங்கள்கிழமை கறிக்கடைக்காரா் உயிரிழந்தாா்.
உசிலம்பட்டி அருகே சுளிஒச்சான்பட்டியைச் சோ்ந்தவா் துரைராஜன் (60). கறிக்கடை நடத்தி வந்த இவா், ஒரு விசேஷத்துக்காக ஆடு உரிக்கச் சென்றுள்ளாா். மதுரை சாலையில் உள்ள சக்கரைபட்டி அருகே சாலையை கடக்கும்போது, மதுரையிலிருந்து தேனி நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதிது. இதில், பலத்த காயமடைந்த துரைராஜனை, உசிலம்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து வாலாந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.