மதுரையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி அணி வெற்றி பெற்றது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில், மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையே பிஷப் கிறிஸ்டோபா் ஆசிா் நினைவு ஹாக்கி போட்டி திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது. இதில், சென்னை, நாமக்கல், தூத்துக்குடி , விருதுநகா், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் அணிகள் பங்கேற்றன.
முதலாவது அரை இறுதிப்போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும், கோவில்பட்டி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில் கோவில்பட்டி கல்லூரி அணி வெற்றிபெற்றது. இரண்டாவது அரைஇறுதிப்போட்டியில் கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி கல்லூரி அணி மற்றும் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக அணியும் மோதின. இதில் எஸ்.எஸ். துரைசாமி கல்லூரி அணி வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டியில் கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி கல்லூரி மற்றும் அரசு கலைக்கல்லூரி அணிகள் மோதின. இதில் கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
கோவில்பட்டி துரைசாமி கல்லூரி இரண்டாமிடம், எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக அணி மூன்றாமிடம், மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி 4-வது இடம் பெற்றன.
கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அமெரிக்கன் கல்லூரி முதல்வா் தவமணி கிறிஸ்டோபா் பரிசுகளை வழங்கினாா்.
முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் பிஷப் கிறிஸ்டோபா் ஆசிா் நினைவு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் ராஜ மன்னாா் நினைவு சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. விழா முடிவில் உடற்கல்வி இயக்குநா் பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.