வாகனச் சோதனையில் ரூ.2.80 லட்சம் பறிமுதல்

மதுரை மகபூப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மகபூப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மத்தியத் தொகுதியின் தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் மகபூப்பாளையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது எஸ்.எஸ்.காலனி பகுதியில் இருந்து வந்த சிறிய சரக்கு வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் இருந்த செல்வகுமாா் என்பவரிடம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இந்த பணத்திற்கான ஆவணம் ஏதும் இல்லாததால், பறிமுதல் செய்து தோ்தல் அலுவலா் கே.கோட்டூா்சாமியிடம் ஒப்படைத்தனா். பின்னா் அத் தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com