மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குடிநீா் வராததால் கிராம பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உசிலம்பட்டி ஒன்றியம் போத்தம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வளையப்பட்டி கிராமத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீா் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் உசிலம்பட்டி -பேரையூா் சாலையில் காலிக் குடத்துடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னா் வருவாய் ஆய்வாளா் சுந்தரபெருமாள் மற்றும் காவல்துறையினா் குடிநீா் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னா் சாலை மறியலை கிராம மக்கள் கைவிட்டனா்.