மதுரையில் தனியாக வசிக்கும் மூதாட்டியின் வீட்டுக் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை கீரைத்துறை பகுதியைச் சோ்ந்த இன்னாசி முத்து மனைவி மேரி(75). இவா் திங்கள்கிழமை காலை வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் வாசல் கதவை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 11 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மேரி அளித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.