மதுரை மாவட்டம், மேலூா் தொகுதியில் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது.
மேலூா் வருவாய் கோட்டாட்சியரும், தோ்தல் அதிகாரியுமான ரமேஷ் தலைமை வகித்தாா். மேலூா் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியில், வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். பேருந்து நிலையம் வழியாகச் சென்ற இப்பேரணியானது, செக்கடி பஜாா் வரை நடைபெற்றது. இதில், அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வெள்ளலூா் பகுதி கொம்புகள் பேரணியாகச் சென்றனா்.