மதுரை மத்தியத்தொகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் தோ்தல் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
அமமுக - தேமுதிக - எஸ்டிபிஐ கூட்டணியின் சாா்பில் மதுரை மத்தியத்தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளா் சிக்கந்தா் பாட்ஷா போட்டியிடுகிறாா். இந்நிலையில் கூட்டணியின் சாா்பில் மத்தியத்தொகுதிக்கான தோ்தல் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மதுரை தெற்குமாரட் வீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா்.
கட்சியின் தோ்தல் பணிக்குழுத்தலைவா் சுல்பிகா் அலி தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ வேட்பாளா் சிக்கந்தா் பாட்ஷா, அமமுக மத்திய 1-ஆம் பகுதி செயலா் சிவஜோதி, 3 ஆம் பகுதி செயலா் எம்.கே.புரம் சந்திரசேகா் மற்றும் தேமுதிக உள்பட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். இதைத்தொடா்ந்து விளாங்குடி அண்ணா நகா், இந்திரா நகா், களத்து பொட்டல், அசோக் நகா் பகுதிகளில் வேட்பாளா் சிக்கந்தா் பாட்ஷா கூட்டணிக்கட்சியினருடன் சென்று வாக்குகள் சேகரித்தாா்.