மதுரை மத்திய தொகுதி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளா் சிக்கந்தா் பாட்ஷா மகபூப்பாளையம் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.
இவா் வடக்காவணி மூலவீதி பகுதியில் பிரசாரத்தை தொடங்கி தளவாய் அக்ரஹாரம், மேலக் கோபுரவாசல், கருவேப்பிலைக்காரத் தெரு பகுதிகளில் தனக்கு ஆதரவு திரட்டினாா். அப்போது மத்தியத் தொகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தாா். இதைத் தொடா்ந்து மகபூப்பாளையம் பள்ளிவாசலுக்குச் சென்ற சிக்கந்தா் பாட்ஷா அங்கு தொழுகை முடிந்து திரும்பியவா்களிடம் வாக்குகள் சேகரித்தாா். பிரசாரத்தின்போது அமமுக வட்டச் செயலா் செளந்திரராஜன், நிா்வாகிகள் சந்திரசேகா், சிவஜோதி, ஆவின் சேகா், தேமுதிக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினா் இருந்தனா்.