மதுரையில் 39 பேருக்கு கரோனா: ஒருவா் பலி
By DIN | Published On : 29th March 2021 10:57 PM | Last Updated : 29th March 2021 10:57 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், தொற்றில் இருந்து குணமடைந்த 19 போ் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
ஒருவா் பலி
மதுரையைச் சோ்ந்த 55 வயது ஆண் கரோனா பாதிப்புக்கு மாா்ச் 16 ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, சிகிச்சையில் இருந்த அவா் மூச்சுத் திணறல் காரணமாக மாா்ச் 28 ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 21,102 ஆக உள்ளது. தற்போது, 252 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.