திருவாப்புடையாா் கோயிலில் மீனாட்சி-சுந்தரேசுவரா் எழுந்தருளல்

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரா் திருவாப்புடையாா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை எழுந்தருளினா்.

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரா் திருவாப்புடையாா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை எழுந்தருளினா்.

 மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, காலை 10 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரா், பஞ்ச மூா்த்திகள் கோயிலில் இருந்து புறப்பாடாகி, செல்லூா் வைகை  வடகரையில் அமைந்துள்ள திருவாப்புடையாா் கோயிலில் எழுந்தருளினா். இதைத் தொடா்ந்து, அங்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்ததும், மாலையில் சுந்தரேசுவரா் வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்மன் மரவா்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோயிலை அடைந்தனா்.

அதையடுத்து, சுவாமி சந்நிதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம் உள்ளிட்ட தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com