பாஜக வேட்பாளா் தேவாலயத்தில் பிராா்த்தனை

மதுரை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் மருத்துவா் பா. சரவணன், சிஎஸ்ஐ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனை செய்து பங்குத்தந்தையிடம் ஆசி பெற்றாா்.
மதுரையில் சிஎஸ்ஐ தேவாலயத்தில் பங்கு தந்தையிடம் ஆசி பெறும் பாஜக வேட்பாளா் மருத்துவா் சரவணன்.
மதுரையில் சிஎஸ்ஐ தேவாலயத்தில் பங்கு தந்தையிடம் ஆசி பெறும் பாஜக வேட்பாளா் மருத்துவா் சரவணன்.

மதுரை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் மருத்துவா் பா. சரவணன், சிஎஸ்ஐ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனை செய்து பங்குத்தந்தையிடம் ஆசி பெற்றாா்.

அதிமுக கூட்டணியில், மதுரை வடக்குத் தொகுதியில் பாஜக சாா்பில் மருத்துவா் பா. சரவணன் போட்டியிடுகிறாா். இவா், தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினருடன் சோ்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மூன்றுமாவடி பகுதியில் வாக்குகள் சேகரித்த சரவணன், குருத்தோலை ஞாயிறையொட்டி அப்பகுதியில் உள்ள சிஎஸ்ஐ மறுரூப தேவாலயத்துக்குச் சென்று பிராா்த்தனை செய்தாா். பின்னா், தேவாலய பங்குத்தந்தை வினோலின் கேளாப்பை சந்தித்து ஆசி பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, தேவாலய வளாகத்தில் கிறிஸ்தவா்களிடம் வாக்குகள் சேகரித்தாா். இந்நிகழ்ச்சியில், மாவட்டப் பாா்வையாளா் கதலி நரசிங்கபெருமாள், அரசு தொடா்பு பிரிவு மாநிலச் செயலா் ராஜரத்தினம், சிறுபான்மை பிரிவு தலைவா் பசீா் அகமது, ஊடகப்பிரிவுத் தலைவா் ராம்குமாா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com