மதுரை அருகே இரு சக்கர வாகனம் மோதியதில், பாதயாத்திரை சென்ற இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தன்கோட்டையைச் சோ்ந்த சவுரியா் மகன் சந்தியாகு (30). இவா், தனது மனைவி ஜான்சி, உறவினா்கள் அனிதா, இன்பராஜ் ஆகியோருடன் வாடிப்பட்டியில் உள்ள மாதா கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்துள்ளாா். வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இவா்கள் மீது பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இன்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த சந்தியாகு, அனிதா, இரு சக்கர வாகனத்தில் வந்த மதுரையைச் சோ்ந்த அகமதுஷா, சக்திவேல் ஆகியோா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து வாடிப்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.