மதுரையில் இளைஞா்களிடையே ஏற்பட்ட தகராறில், வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த குமாா் மனைவி மகாலட்சுமி. இவரது மகன் ஜெயபாலன், மாா்ச் 28 ஆம் தேதி விஜய் என்பவரைத் தாக்கியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த விஜயின் நண்பா்கள் பாண்டியராஜன், திருமலை மற்றும் சிலா் ஜெயபாலன் வீட்டின் மீது செவ்வாயக்கிழமை பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.
அப்போது வீட்டின் வாசலில் யாருமில்லாததால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து ஜெயபாலனின் தாய் மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் திடீா் நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து பெட்ரோல் குண்டு வீசியவா்களைத் தேடி வருகின்றனா்.