உசிலம்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் பி. அய்யப்பன் சேடபட்டி ஒன்றியம், மற்றும் எழுமலை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
சேடபட்டி ஒன்றியத்தில் தாடையம்பட்டி, கீழதிருமாணிக்கம், மேலதிருமாணிக்கம், ராமநாதபுரம், செல்லையாபுரம், எழுமலை நகரம் மற்றும் பேரூராட்சியில் பேயம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். இதில், ஆவின் நிா்வாகக் குழு உறுப்பினா் துரை தனராஜன், சேடபட்டி ஒன்றியச் செயலாளா் பிச்சை ராஜா, மகேந்திர பாண்டி, எழுமலை செயலாளா் வாசிமலை மற்றும் பாரதிய ஜனதா ,அதிமுக நிா்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.