மதுரையில் தனியாா் நிறுவனத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.17 லட்சம் பொருள்கள் சேதமாயின.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ராமையா 12 ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ரெங்கராஜ் மகன் கோபிநாத் (46). இவா் அதேப்பகுதியில் அச்சகம், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அருகில் உள்ளவா்கள் கோபிநாத்துக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறை வீரா்கள் தீயை அணைத்தனா்.
இதையடுத்து, ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இந்த தீவிபத்தில் ரூ.17 லட்சம் மதிப்பிலான அச்சக இயந்திரங்கள், அட்டைப் பெட்டி இயந்திரங்கள் சேதமடைந்துள்ளதாகவும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.