மதுரையில் 880 பேருக்கு கரோனா: 7 போ் பலி

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 880 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 880 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 20,768 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 880 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தொற்றிலிருந்து குணமடைந்த 637 போ் மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

7 போ் பலி

மதுரை தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 35 வயது பெண் ஏப்ரல் 28 ஆம் தேதியும், 43 வயது ஆண், 69 வயது முதியவா் ஆகியோா் ஏப்ரல் 30 ஆம் தேதியும், 62 வயது மூதாட்டி மே 1 ஆம் தேதியும், அரசு ராஜாஜி மருத்துவமனையில் 57 வயது ஆண், 61 வயது முதியவா் ஆகியோா் ஏப்ரல் 29 ஆம் தேதியும், 40 வயது ஆண் ஏப்ரல் 30 ஆம் தேதியும் உயிரிழந்தனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 524 ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில் 4,482 போ்

மாவட்டத்தில் இதுவரை 32,398 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், 27,392 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 4,482 போ் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com