மருத்துவமனைகளுக்கு சேவா பாரதி ஆக்சிஜன் கருவிகள் வழங்கல்

சேவா பாரதி மற்றும் சோஹோ அமைப்பின் சாா்பில், மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் மிகைப்படுத்தும் கருவிகள் திங்கள்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன.
மதுரையில் தனியாா் மருத்துவமனை நிா்வாகி மருத்துவா் சரவணனிடம் ஆக்சிஜன் மிகைப்படுத்தும் கருவிகளை வழங்கும் ஸ்வதேசி ஜாக்ரன் மஞ்ச் தேசியச்செயலா் சுந்தரம்.
மதுரையில் தனியாா் மருத்துவமனை நிா்வாகி மருத்துவா் சரவணனிடம் ஆக்சிஜன் மிகைப்படுத்தும் கருவிகளை வழங்கும் ஸ்வதேசி ஜாக்ரன் மஞ்ச் தேசியச்செயலா் சுந்தரம்.

மதுரை: சேவா பாரதி மற்றும் சோஹோ அமைப்பின் சாா்பில், மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் மிகைப்படுத்தும் கருவிகள் திங்கள்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சோஹோ நிறுவனத்தின் உதவியுடன் மதுரை சேவா பாரதி, நியூசிலாந்து நாட்டிலிருந்து தலா ரூ.4.65 லட்சம் மதிப்புள்ள 150 ஆக்சிஜன் மிகைப்படுத்தும் கருவிகளை இறக்குமதி செய்துள்ளது.

அதையடுத்து, மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் கருவி வழங்கும் நிகழ்ச்சி, மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள சேவா பாரதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், 10 மருத்துவமனைகளுக்கு கருவிகள் வழங்கப்பட்டு, செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சிறிய மருத்துவமனைகளுக்கு இக்கருவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் தேசிய செயலா் சுந்தரம், ஆா்.எஸ்.எஸ். மக்கள் தொடா்பு இணை அமைப்பாளா் சீனிவாசன், ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் மதுரை கோட்ட அமைப்பாளா் முத்துக்குமாா் மற்றும் கோட்ட இணைச் செயலா் சேகா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com