மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேங்காய் ஏலத்தில், அதிகபட்சமாக ஒரு காய் ரூ.11.10-க்கு ஏலம் போனது.
தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைக்கிழமைகளில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. இதன்படி, செவ்வாய்க்கிழமை (மே 4) நடைபெற்ற ஏலத்தில் 13 விவசாயிகளின் 55, 370 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில் 10 வியாபாரிகள் பங்கு பெற்றனா். ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ 11.10-க்கும் குறைந்தபட்சமாக ரூ 8.10-க்கும் ஏலம் போனது. இதன்படி, ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய்களுக்குரிய தொகை ரூ.4.68 லட்சம் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.