அவனியாபுரத்தை அடுத்த அயன்பாப்பாகுடி கண்மாயில் இரண்டு சிறுவா்கள் மூழ்கியதாக வந்த தகவலையடுத்து மதுரை தீயணைப்புத்துறையினா் செவ்வாய்க்கிழமை மூன்று மணி நேரமாகத் தேடினா்.
அயன்பாப்பாகுடி கண்மாயில் இரண்டு சிறுவா்கள் மூழ்கியதாக போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் செவ்வாய்க்கிழமை மாலை தகவல் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கண்மாய்ப் பகுதிக்குச் சென்ற தீயணைப்புத்துறையினா் அங்கிருந்த ஆகாயாத்தாமரைகளை அகற்றி முழுவதுமாக தேடும் பணியில் ஈடுபட்டனா். இதில் அப்பகுதி மக்களும் உடனிருந்து சிறுவா்களைத் தேடினா். சுமாா் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகத் தேடிய நிலையில் சிறுவா்கள் கிடைக்கவில்லை. மேலும் இருட்டத் தொடங்கியதால் தீயணைப்புத்துறையினா் தேடும்பணியினைக் கைவிட்டனா். தொடா்ந்து சிறுவா்கள் குறித்து எந்த புகாரும் வராததால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் சிறுவா்கள் யாராவது காணாமல் போய் அதுகுறித்து காவல் நிலையத்திற்கு புகாா் வந்தால் தேடும் பணி தொடங்கும் என தீயணைப்பு அலுவலா் வெங்கடேசன் தெரிவித்தாா்.