கஞ்சா விற்றவா் கைது: 5 கிலோ பறிமுதல்

மதுரை செல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவரைக் கைது செய்த போலீஸாா், அவா் விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை செல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவரைக் கைது செய்த போலீஸாா், அவா் விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை செல்லூா் குலமங்கலம் பிரதான சாலையில் கஞ்சா விற்பனை நடப்பதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், செல்லூா் சாா்பு-ஆய்வாளா் லட்சுமி தலைமையிலான போலீஸாா் குலமங்கலம் பிரதான சாலை பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து விசாரணை நடத்தினா். அதில் பனங்காடியைச் சோ்ந்த பாண்டித்துரை (40) என்பவா் அப்பகுதியில் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, அவா் விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com